போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
கிராம சேவகர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதில் ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் துரித இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.
அனர்த்த நிவாரண கொடுப்பனவில் கிராமசேவையாளர்கள் பக்க சார்பாக செயல் படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.