சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டம், கொட்டுகச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரியும் போதகர் ஒருவர், 15 வயது சிறுமியுடன் பழகியுள்ளார்.
பின்னர் கடவுளுக்கு சேவை செய்ய அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (29) இன்று உறுதி செய்தது.