;
Athirady Tamil News

யாழில் நடுவீதியில் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம் ; அதிரடி காட்டும் புதிய பொலிஸ் அதிகாரி

0

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ முகாமில் பணியாற்றிய ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.

அதிரடி கைது
இந்நிலையில் குறித்த பெண் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரான, மைலிட்டி இராணுவ முகாமில் கடமை புரியும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.