;
Athirady Tamil News

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்: டிரம்ப் அறிவிப்பு

0

வாஷிங்டன்,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் என்றும், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி பதற்றத்தை அதிகரிக்க செய்திருந்தது. ஆனால், இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் அயதுல்லா மறுத்திருந்தார். இஸ்ரேலின் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், 86 வயதான கமேனி கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து அமெரிக்கர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. கமேனி மற்றும் அவரது இரத்தவெறி கொண்ட குண்டர்களின் கும்பலால் கொல்லப்பட்டர்களுக்கும், சிதைக்கப்பட்டவர்களால் நமது உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளை எதிர்கொள்ள முடியவில்லை,

மேலும் நாங்கள் இஸ்ரேலுடன் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவரோ (காமேனி) அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியவில்லை

ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர்களின் பல ஐஆர்ஜிசி, ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் இனியும் போராட விரும்பவில்லை. எங்களிடமிருந்து அனுகூலமான சக்தியை எதிர்பார்க்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.

நேற்று இரவு நான் சொன்னது போல், “இப்போது அவர்களுக்கு நாங்கள் அனுகூலமான சக்தி இருக்க முடியும், பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும்!” நம்பிக்கையுடன், IRGC மற்றும் காவல்துறை ஈரானிய தேசபக்தர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து, நாட்டை அதன் மகத்துவத்திற்கு மீண்டும் கொண்டு வர ஒரு பிரிவாக இணைந்து செயல்படும். அந்த செயல்முறை விரைவில் தொடங்கப்பட வேண்டும்.

காமேனியின் மரணம் மட்டுமல்ல, ஈரான் நாடும் ஒரே நாளில் பெரிதும் அழிக்கப்பட்டது. இருப்பினும், கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்புகள் இந்த வாரம் முழுவதும் தடையின்றி தொடரும். உண்மையில் உலகம் முழுவதும் அமைதி என்ற நமது நோக்கத்தை அடைய தேவையான வரை தாக்குதல் தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.