;
Athirady Tamil News

நேபாள பிரதமராகப் பதவியேற்றார் பாலேந்திர ஷா!

0

நேபாள நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை (மார்ச் 27) பதவியேற்றுக் கொண்டார்.

நேபாளத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் (ஆா்எஸ்பி) 125 உறுப்பினர்கள் நேரடியாக வெற்றி பெற்றதுடன், 57 உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 182 உறுப்பினர்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ஆர்எஸ்பி கட்சியின் தலைவரான 35 வயதாகும் முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை மதியம் 12.34 மணிக்கு பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இத்துடன், நேபாளத்தின் முதல் இளம் பிரதமரான பாலேந்திர ஷாவுக்கு அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பௌடெல் பதவிப் பிரமானம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில், ஹிந்து மற்றும் புத்த மதங்களின் சடங்குகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.