;
Athirady Tamil News

ட்ரம்ப் பெயரில் விமான நிலையம் ; எரிக் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் என்ற சர்வதேச விமான நிலையம், இனி ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் மற்றும் தொழிலதிபரான எரிக் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டமூலம் ஒன்றிற்கு புளோரிடா ஆளுநர் ரான் டிசேன்டிஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்காக புளோரிடா மாகாண பிரதிநிதி மேக் வெயின்பெர்கர், ஆளுநர் ரான் டிசேன்டிஸ், புளோரிடா அட்டார்னி ஜெனரல் ஜேம்ஸ் உத்மெயர் மற்றும் புளோரிடா அவையின் உறுப்பினர்களுக்கும் எரிக் ட்ரம்ப் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் என்ற இந்த புதிய பெயர் மாற்றம் வருகிற ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றது.

ஆனால், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெயர் மாற்றங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் அது உள்ளூர் விவகாரம் என்றும் தெரிவித்துள்ளது.

எனினும், பயண அட்டவணை மற்றும் தகவல் தொகுப்புகளை மாற்றம் செய்வது உள்ளிட்ட சில நிர்வாக பணிகளை நாங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.