;
Athirady Tamil News

மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!

0

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகம், எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் அருகே வல்லூர் வாலாஜா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது வீட்டில் தேர்வுக்காக நேற்றிரவு (ஏப். 14) படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கஞ்சா போதையில் மாணவியில் வீட்டுக்குள் புகுந்த மூன்று இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற மாணவியை மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதில், படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய இளைஞர்களை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.