கோவில் திருவிழாவில் நடனமாடியபோது மயங்கி விழுந்து பரதநாட்டிய கலைஞர் உயிரிழப்பு
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பாலாழி பகுதியை சேர்ந்தவர் ஷாஜு. இவரது மனைவி ஷைனி (52 வயது). பரதநாட்டிய கலைஞர். இவர் நேற்று முன்தினம் இரவு சிரைக்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.