;
Athirady Tamil News

அக். 7 தாக்குதல் நடத்தியவா்களுக்கு மரண தண்டனை வழங்க இஸ்ரேலில் தனி தீா்ப்பாயம்

0

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் தொடா்புடையவா்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் தனியாக சிறப்புத் தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இச்சிறப்பு தீா்ப்பாயம் வழக்கமான நடைமுறைகளைத் தவிா்த்து, பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் மரண தண்டனை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது. மேலும், விசாரணைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அதேநேரம், இந்நடவடிக்கையில் குற்றவாளிகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படாமல், நீதித்துறை நெறிமுறைகள் மீறப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

ஹமாஸ் 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா்; 251 போ் பிணைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனா். இதையடுத்து, காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 72,000-க்கும் அதிகமான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.