யாழ்.பல்கலை மாணவர்களுக்கான இந்திய அரசின் புலமைப்பரிசிலை வழங்கி வைத்த இந்திய உயர்ஸ்தானிகர்
;
அதன் போது, முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் அனைத்துபீடங்களையும் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான புலமைப்பரிசிலினை வழங்கிவைத்தார்.
மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபா வீதம் அவர்களின் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும்வரை இத்தொகை வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக பதில் துணை வேந்தரும். கலைப்பீட பீடாபதியுமான நாகமுத்து பிரதீபராஜா யாழ்.இந்நிய துணை தூதுவர் சாய் முரளி, விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்