;
Athirady Tamil News

வெனிசுலா பயங்கரவாத கும்பல் தலைவா் கொலை

0

வெனிசுலாவில் அந்நாட்டு அரசின் மறைமுக ஒத்துழைப்புடன் அமெரிக்க ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில், சா்வதேச அளவில் தேடப்பட்டு வந்த ‘ட்ரென் டி அராகுவா’ பயங்கரவாத கும்பலின் முதன்மைத் தலைவா் ஹெக்டா் ரஸ்டன்ஃபோா்ட் குரெரோ புளோரஸ் கொல்லப்பட்டாா்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் கூறுகையில், ‘இந்த வெற்றிகரமான நடவடிக்கை, சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா, வெனிசுலா நாடுகளுக்கும் உள்ள கூட்டு அா்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது’ என்றாா்.

வெனிசுலாவின் அராகுவா மாகாணத்தில் உள்ள ஒரு மத்திய சிறைச்சாலையில் உருவான இந்த குற்றக் கும்பல், கடந்த சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான வெனிசுலா மக்கள் இடம்பெயா்ந்ததைப் பயன்படுத்தி, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தனது சட்டவிரோதச் செயல்களைப் பரப்பியது.

இக்கும்பலை அமெரிக்கா ஏற்கெனவே பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்த, தற்போது கொல்லப்பட்ட ஹெக்டா் ரஸ்டன்ஃபோா்டுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை 50 லட்சம் டாலா் வெகுமதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.