;
Athirady Tamil News

டெங்கு ஆபத்து பகுதிகளை அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்

0

நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அறிவிக்க புதிய அவசர தொலைபேசி சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் தெரிவித்ததாவது,

அவசர தொலைபேசி இலக்கம்
மக்கள் தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படாத நீர் தேங்கும் பாத்திரங்கள், கழிவுகள், பழைய டயர்கள் போன்றவற்றில் டெங்கு நுளம்புகள் பெருகும் வாய்ப்பு உள்ள இடங்களை அடையாளம் கண்டால், உடனடியாக டெங்கு நிவாரண மையத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக டெங்கு நிவாரண மையத்தின் அவசர தொலைபேசி இலக்கம் 011 796 6366 பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் காணப்படும் ஆபத்தான இடங்களை அறிவிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கள் அனுப்பப்பட்டு, உடனடி சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதாரத் துறைகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இவ்விடயத்தில் மிக முக்கியமானதாகும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் தாமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நோய் பரவலைக் குறைக்க முடியும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.