நெடுந்தீவில் வீட்டுத்திட்ட வீட்டினை கையளித்த அமைச்சர்கள்
நெடுந்தீவில் வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து, அதன் சாவியை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
