அமெரிக்கா தாக்குதல்! ஈரான் உடன் ரஷியா, சீனாவை இணைக்கும் ரயில் பாலம் தகர்ப்பு!
ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடனான ஈரானின் முக்கிய ரயில் பாதையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றும் வரும் நிலையில், இருதரப்புக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ஈரானின் வடக்கு மாகாணமான கோலெஸ்தானில் உள்ள ஆக்டே கான் ரயில் பாலத்தின் மீது நேற்று (ஜூலை 9) அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே பாலம், சீனா மற்றும் துர்க்மெனிஸ்தான் உடனான ஈரானின் வழித்தடங்களில் முக்கிய பாதையாகக் கருதப்படுகிறது. மேலும், ரஷியா மற்றும் சீனாவை ஈரானுடன் இணைக்கும் இந்த ரயில் பாதையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.