;
Athirady Tamil News

கனடாவின் பேரி நகரைச் சேர்ந்த பெண் அதிர்ஷ்டசாலி!

0

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பேரி நகரைச் சேர்ந்த அன்னி என்ற பெண், ‘கிராஸ்வேர்ட் எக்ஸ்ட்ரீம் ஸ்கிராட்ச்’ லாட்டரி சீட்டு மூலம் 350,000 டொலர் என்ற அசுரப் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

தனது பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக டொராண்டோவில் உள்ள லாட்டரி பரிசு மையத்திற்கு சென்றிருந்த அன்னி, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

நான் பல வருடங்களாக லாட்டரி விளையாடி வருகிறேன். எனக்குக் கிடைத்துள்ள முதலாவது பெரிய வெற்றி இதுதான். எனக்கு எப்போதும் ‘கிராஸ்வேர்ட்’ விளையாட்டுதான் மிகவும் பிடிக்கும். ஒரு புதிரை விடுவிப்பது போல, நாம் நிதானமாக நேரம் எடுத்து விளையாடலாம் என்பதால் இதை நான் விரும்பி வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் மதியம், பேரி நகரின் யாங் வீதியில் உள்ள ‘ஜெர்ஸ்’ வணிக வளாகத்தில் இருந்து வெளியேறவிருந்த அன்னி, வழக்கம்போல தனக்கான லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.

அன்றைய தினம் மாலையில் வீட்டில் அமர்ந்து அந்தச் சீட்டுகளைச் சுரண்டியுள்ளார். முதலாவது சீட்டைச் சுரண்டியபோது அவருக்கு 75 டொலர் பரிசு கிடைத்துள்ளது. அதற்கே அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஆனால், அடுத்த சீட்டைச் சுரண்டியபோது அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. லாட்டரி செயலியில் அதனை ஸ்கேன் செய்து பார்த்தபோது, தமக்கு 350,000 டாலர் பம்பர் பரிசு விழுந்திருப்பதை உறுதி செய்தார்.

இதனால் உற்சாகமடைந்த அவர், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது கணவர், இந்த அதிர்ஷ்டத்தை நம்ப முடியாமல் திகைத்துப் போனதாக அன்னி தெரிவித்தார். “இது இன்னும் எனக்கு ஒரு கனவு போலத்தான் இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

திடீரெனக் கிடைத்துள்ள இந்த பெரும் அதிர்ஷ்டப் பணத்தைக் கொண்டு, தனது பிள்ளைகளுக்கு உதவவும், எதிர்காலத்திற்காகச் சேமிக்கவும் மற்றும் தனது ஓய்வூதியக் காலத்தைத் திட்டமிடவும் அன்னி முடிவு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.