60,448 கடல் அட்டைகளுடன் 26 பேர் கைது
மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 60,448 கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின்போது, 26 சந்தேகநபர்களும் 12 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான பல டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன.
அப்போது கடல் வழியாக சட்டவிரோதமாக தரைக்கு கடத்தப்பட்டிருந்த பெருமளவிலான கடல் அட்டைகள் மீட்கப்பட்டன. மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.