;
Athirady Tamil News

முதியோர்களுக்கான வெளியான மகிழ்ச்சி தகவல் ; அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக முந்நூற்று பத்து கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபா (3,108,190,000) நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக முப்பத்து எட்டு கோடியே அறுபத்து ஆறு இலட்சத்து இருபதாயிரம் ரூபா (386,620,000) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக முந்நூற்று நாற்பத்தொன்பது கோடியே நாற்பத்து எட்டு இலட்சத்து பத்தாயிரம் (3,494,810,000) ரூபா வழங்கப்படவுள்ளது.

பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.