செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகள் ஓர் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களின் உச்சக்கட்ட சான்றுகளாக அமைந்துள்ளன.
இலங்கையின் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி உருவாகியுள்ள போதிலும் தசாப்தங்கள் பல கடந்த நிலையிலும், இக்கொடூரங்களுக்கு காரணமான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்காமலும் காணப்படுகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பில் பெரும்பாலானவர்கள் தமக்கு சர்வதேச விசாரணையே தேவை என நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
இந்த அரசின் கட்டுப்பாட்டிலே உள்ள செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட , மனித என்புக்கூடுகள் , சான்று பொருட்கள் , கொடுக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதற்குத்தான் சாத்தியம் காணப்படுகிறது.
எனவே இந்த சாட்சியங்களைப் பாதுகாத்து, சர்வதேச விசாரணையின் ஊடாக இந்த சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
