உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கு செயலமர்வு
;
இதன்போது இலங்கையின் அரச கட்டமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் அதன் நிர்வாகச் செயற்பாடுகள், உள்ளூராட்சி மன்றங்களின் வருமான மூலங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் டிஜிட்டல் திரைகளின் உதவியுடன் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறை ரீதியான புரிதலை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இச் செயலமர்வில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரனும் கலந்து கொண்டார்.