;
Athirady Tamil News

பகிடிவதையின் மறுபக்கம் !

0

இலங்கை போன்ற அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் மேலத்­தேய கலா­சா­ரமும், தொழில்­நுட்ப வளர்ச்­சியும் அதிகம் தாக்கம் செலுத்தி வரு­கி­றது. இத்­தாக்­கத்தின் கார­ண­மாக சமு­தாய ஆரோக்­கியம் பல்­வேறு நிலை­களில் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஒழுக்க விழு­மி­ய­மிக்க ஆரோக்­கி­ய­மான சமு­தா­யத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது என்­பது சவா­லாக மாறி­விட்­டது. ஏனெ­னில், புதிய தலை­மு­றை­யி­னர்­க­ளாகக் கரு­தப்­படும் தற்­போ­தைய பாட­சாலை மாண­வர்கள் முதல் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வரை தொலைக்­காட்சி, வானொலி, கையடக்கத் தொலை­பே­சி, சமூக ஊடகப் பயன்­பாடு என்­ப­வற்­றுக்கு அடி­மைப்­பட்டு வரு­கின்­றனர். இதனால், குறிப்­பாக பாட­சாலை மாண­வர்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­டையே விழு­ய­மிக்க மனிதப் பண்­புகள் அகன்று செல்லும் நிலை­யில், வக்­கிர எண்­ணங்கள் அதி­க­ரித்து அவ்­வெண்­ணங்கள் செயல்­வ­டிவில் வெளிப்­ப­டுத்­தப்­படும் அங்­கீ­க­ரிக்க முடி­யாத பல சம்­ப­வங்கள் நிறை­யவே நிகழ்­வதைக் காண­மு­டி­கி­றது. இதில் ஒன்­றா­கவே பல்­க­ழைக்­க­ழங்­களில் இடம்­பெ­று­கின்ற பகி­டி­வதை எனும் வக்­கிர எண்­ணங்­களின் நடத்தைச் செயற்­பா­டு­களை நோக்க வேண்­டி­யுள்­ளது.

புதிய மாண­வர்­க­ளுடன் சினே­க­பூர்­வ­மான நட்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காகக் கூறி நான் பெற்ற துன்பம் மற்­ற­வரும் அடைய வேண்டும் என்ற வக்­கிர எண்­ணத்­துடன் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற பகி­டி­வ­தைகள் பல மாண­வர்­களை உடல், உள ரீதி­யாகப் பாதித்­தி­ருப்­ப­துடன் பாலியல் ரீதி­யான துன்­பு­றுத்­தல்­க­ளுக்கும் இட்டுச் சென்­றி­ருக்­கி­றது. இதனால் சில மாண­வர்கள் தற்­கொலை புரிந்­துள்­ள­துடன் தற்­கொலை முயற்­சி­யிலும் ஈடு­பட்­டி­ருப்­பதே தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. இந்தப் பகி­டி­வதை வன்­முறைச் செயற்­பா­டு­க­ளினால் இரண்­டா­யிரம் மாண­வர்கள் வரை பல்­க­லைக்­க­ழக கல்­வியை இடை­நி­றுத்­தி­யி­ருப்­ப­தாக தக­வல்­களும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வாறு பகி­டி­வதை கார­ண­மாக பல்­க­லைக்­க­ழக கல்­வியை இடை­நி­றுத்தி மாண­வர்­க­ளுக்கு கல்­வியைத் தொடர்­வ­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்ள சூழலில், அண்­மையில் யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவி ஒருவர் பகி­டி­வ­தைக்­குள்­ளான சம்­பவம் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. இதன் எதி­ரொ­லிகள் பல்­வேறு வடி­வங்­களை அடைந்­தி­ருப்­ப­தையும் நோக்க வேண்­டி­யுள்­ளது.

ஒரு நபர் மற்­றொரு நப­ருடன் சமூ­க­ம­யமாக்­கப்­ப­டு­வ­தற்கு ஆரோக்­கி­ய­மான பொறி­மு­றைகள் பல காணப்­படும் நிலையில் மற்­ற­வரைத் துன்­பு­றுத்தி இன்­ப­மடையும் சமூ­க­ம­ய­மாக்கல் முறை­யாகப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடம்­பெ­று­கின்ற பகி­டி­வ­தைகள் தடுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மென்­ப­துடன் இதனை சட்­டங்­களைக் கொண்டு நிறுத்த முடி­யாது என்­பதும் தெளிவா­கி­றது. ஏனெ­னில, இவ்­வன்­முறை சமூ­க­­ம­ய­மாக்கல் செயற்­பா­டான பகி­டி­வ­தையைத் தடுப்­ப­தற்கு சட்டம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், அச்­சட்­டத்­தினால் பகி­டி­வதை நிறுத்­தப்­ப­ட­வில்லை என்­பதன் மூலம் சட்­டத்­தினால் மாத்­திரம் இதனைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்­பது தெளிவா­கி­றது.

ஒரு­வகை ஆளுமை உளக்­கோ­ளாறு கொண்­ட­வர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இத்­த­கைய நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மாயின் அவர்கள் உளச்­சி­கிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் அவர்­க­ளி­டையே விழு­மியப் பண்­புகள் வளர்க்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

எதிர்­கால சந்­ததி­யினர் மத்­தியில் தற்­கா­லத்தில் காணப்­படும் விழு­மியம் நளு­விய செயற்­பா­டு­க­ளுக்கு சூழல் மற்றும் ஊட­கத்­தாக்­கங்கள் இன்­றி­ய­மை­யா­தது. உடல், உள வளர்ச்­சிக்­கு­ரிய பண்­டைய விளை­யாட்­டுக்­களும், பொழு­து­போக்­கு­களும் மறக்­கப்­பட்ட அல்­லது புதிய நவீ­னத்­து­வங்­க­ளினால் மறைக்­கப்­பட்ட நிலையில் பல சிறு­வர்கள் காட்டூன் பார்ப்­ப­திலும் வீடியோ கேம் விளை­யா­டு­வ­திலும் அதிக நேரத்தைச் செல­வி­டு­கின்­றனர். அதே­போன்று, கட்­டி­ளமைப் பரு­வத்­தினர் பலர் ஸ்மாட் போன் பயன்­பாட்­டிலும் பேஷ்புக், வட்ஸ்சப் போன்ற சமூக ஊடகப் பாவ­னை­யிலும் அதிக நேரத்தைச் செல­வி­டு­கின்­றனர். இவ்­வா­றான செயற்­பா­டுகள் பல்­வேறு பாதக விளை­வு­களை பயன்­பாட்­டா­ளர்கள் மத்­தியில் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. அவர்­களின் நேரான பாதை­களை திசை­மாற்­றி­யி­ருக்­கி­றது.

தொழில்­நுட்ப பரி­ணாம வளர்ச்­சியின் ஒரு­பக்கம் மனித சமு­தா­யத்­திற்கு ஆரோக்­கி­ய­மாக அமை­கின்­ற­போ­தி­லும். அதன் மறு பக்கம் பாத­க­மா­கவும் அமைந்­து­வி­டு­கி­றது. எந்­த­வொரு விட­யமும் அதன் அளவை மீறிச் செல்­கின்­ற­போது ஆரோக்­கி­ய­மற்ற நிலை­யையே தோற்­று­விக்கும். இத­னை­யொட்­டி­ய­தாக அதிக நேரம் வீடியோ கேம் விளை­யா­டு­வது உள­வியல் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் என்று உலக சுகா­தார ஸ்தாபனம் எச்­ச­ரித்து வந்த நிலையில்

வீடியோ கேம் விளை­யாட்­டுக்கு அடி­மைப்­ப­டு­வதை ‘Gaming disorder’ என்ற உள­வியல் பாதிப்­பாக வகைப்­ப­டுத்­தப்­பட்டு உலக சுக­ாதார ஸ்தாப­னத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளை­யா­டு­வது நண்­பர்­க­ளையும், குடும்­பத்­தி­ன­ரையும் எரிச்­ச­ல­டையச் செய்­வ­துடன் மன­நல பாதிப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ள உலக சுகா­தார ஸ்தாபனம் சர்­வ­தேச நோயியல் வகைப்­ப­டுத்­தலில் வீடியோ கேம் விளை­யாட்­டையும் உள­வியல் பாதிப்­பாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருப்­பது எதுவும் அள­வுக்கு மிஞ்­சினால் நஞ்­சாகும் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தோடு வழி­காட்­டலின் பல­வீ­னத்­தையும், விழு­மி­யங்­க­ளி­லி­ருந்து சிறு­வர்­களும், வளர்ந்­த­வர்­களும் விலகி வரு­வ­தையும் எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

புதிய தலை­மு­றை­யி­னர்­க­ளான சிறு­வர்­க­ளி­னதும், கட்­டி­ள­மைப்­ப­ரு­வத்­தி­ன­ரதும் மித­மிஞ்­சிய செயற்­பா­டுகள் அளவு கடந்து செல்­லாது தவிர்க்­கப்­பட வேண்­டு­மாயின் அவர்கள் ஆரோக்­கி­ய­மான வழி­காட்­டல்­க­ளுடன், விழு­மியப் பண்­பு­க­ளு­டனும் வளர்க்­கப்­ப­டு­வது அவ­சி­மா­க­வுள்­ளது. ஏனெனில், நாக­ரீகம் என்ற பெயரில் அநா­க­ரீகம் வெகு­வாக சமு­தா­யத்­திற்குள் ஊடு­ருவி வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. இதனால், புதிய தலை­மு­றை­யினர் மத்­தியில் கலா­சாரச் சீர­ழி­வுகள் ஏற்­பட்­டி­ருக்கும் இக்­கால கட்­டத்தில் முறை­யான வழி­காட்­டல்­கள், ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவும் பல­மா­ன­தா­கவும் அமை­வ­தோடு பல­வீ­ன­ம­டைந்­துள்ள விழு­மி­யங்­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக விழு­மியக் கல்­விக்­கான முக்­கி­யத்­து­வமும் அவ­சி­மா­க­வுள்­ளது.

ஒரு பிள்­ளையின் சிறப்­பான வளர்ச்­சியில் சமூக முக­வர்­க­ளான பெற்­றோர்­களும், ஆசி­ரி­யர்­களும், சம­வ­யதுக் குழு­வி­னரும், சமய போத­கர்­களும் அதி முக்­கிய பங்கு வகிக்­கின்­றனர். இந்த முக­வர்­க­ளோடு ஊட­கங்­களும் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. சமூக முக­வர்­களின் வழி­காட்­டல்கள் பல­வீ­ன­ம­டை­கின்­ற­போது, பிள்­ளை­களின் விழு­மியப் பண்­பு­சார் வளர்ப்பும், வளர்ச்­சியும் திசை­மா­று­வ­துடன் எதிர்­பா­ராத விப­ரீ­தங்­க­ளையும், மர­ணங்­க­ளையும் கூட ஏற்­ப­டுத்தி விடு­கி­றது.

தங்­க­ளுக்குச் சாத­க­மான சூழல் அமை­கின்­ற­போது சிறு­வர்­களும், கட்­டி­ள­மைப்­ப­ரு­வத்­தி­னரும் விழு­மி­யங்­க­ளுக்கு அப்பால் சென்று வழி­காட்­டல்­களை மிஞ்­சிய செயற்­பாட்டை பரீட்­சிக்க முற்­ப­டு­கின்­றனர். இதனால், அவர்கள் பல்­வேறு விப­ரீ­தங்­களை எதிர்­நோக்­கு­வ­துடன் சமூக, பொரு­ளா­தார ரீதி­யிலும் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­துக்­கின்­றனர். நாக­ரீகம் என்ற போதைக்குள் விழுந்­துள்ள புதிய தலை­மு­றை­யினர் அதன் விளை­வு­க­ளையும் எதிர்­நோக்கி வரு­கின்­றனர். அண்­மைக்­கா­ல­மாக இத்­த­கைய சம்­ப­வங்கள் பர­வ­லாக இடம்­பெ­று­வதைக் காண­மு­டி­கி­றது.

நாட்டில் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்ள நிலையில், அதில் பங்­கா­ளர்­க­ளா­கவும் பரி­தா­பத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவும் சில சிறு­வர்­களும், வளர்ந்­த­வர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். பாட­சாலை மாணவர் ஒருவர் சக மாண­வர்­க­ளினால் தாக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் உயிர் இழக்கும் சம்­ப­வங்கள் கடந்த காலங்­களில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. பகி­டி­வதை என்­ற­போர்­வையில் சிரே­ஷ்ட மாண­வர்­களில் கனிஷ்ட மாண­வர்கள் பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாகும் நிலை பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடம்­பெ­று­கி­றது. இச்­சம்­ப­வங்கள் பல்­க­லை­கக்­க­ழங்கள் மற்றும் பாட­சா­லை­களில் காணப்­படும் வழி­காட்­ட­லி­லுள்ள பல­வ­வீ­னத்தைப் புடம்­போ­டு­வ­தோடு விழு­மியக் கல்­வியின் அவ­சி­யத்­தையும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது எனக் கருத வேண்­டி­யுள்­ளது.

அத்­துடன், பாலியல் வன்­கொ­டு­மைகள், வீட்டு வன்­மு­றைகள் என பல கோணங்­களில் சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். அத்­துடன் இச்­சம்­ப­வங்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்கள் மற்றும் இச்­சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­ப­டு­கின்­ற­வர்கள் உள­வியல் பாதிப்­புக்­கு­ள்ளாகும் நிலையும் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. புதிய தலை­மு­றை­யினர் மத்­தியில் அதி­க­ரித்து வரு­கின்ற விழு­மி­யங்­களின் பல­வீ­னமும், விழு­மி­ய­மற்ற நடத்­தை­களும், செயற்­பா­டு­க­ளும்தான் இச்­சம்­ப­வங்­க­ளுக்கு பின்­னணி வகிக்­கி­றது என்­பதை சுட்­டிக்­காட்­டு­கி­றது. இவை ஒரு புற­மி­ருக்க, அறி­யாமல் புரி­யப்­ப­டு­கின்ற அல்­லது சூழலின் சாதக நிலை­மை­யி­னாலும், நவீன ஊட­கங்­களின் தாக்­கத்­தி­னாலும் அவற்­றுக்கு அடி­மை­யா­வ­த­னாலும் ஏற்­ப­டு­கின்ற விளை­வுகள் பெறு­ம­தி­மிக்க உயிர்­க­ளையும் காவு­கொள்­கின்­றன.

சிறு­வர்கள் வழி­த­வ­று­வ­தற்கும் பரி­தா­ப­க­ர­மான சம்­ப­வங்­க­ளுக்கு உள்­ளா­கு­வ­தற்­கு­மான சூழலை ஏற்­ப­டுத்­தி­விட்டு அவை ஏற்­பட்ட பின்னர் அவை குறித்து கவலை கொள்­வதில் எவ்­வித அர்த்­த­மு­மில்லை என்­பதை கவ­லை­யோடு சுட்­டிக்­காட்­டு­வது கடப்­பா­டா­க­வுள்­ளது. ஏனெனில், அண்­மைக்­கா­ல­மாக இத்­த­கைய பரி­தாப சம்­ப­வங்­க­ளினால் பல சிறு­வர்கள் மர

­ணித்­துள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது.

அதே­போன்று, கட்­டி­ளமைப் பரு­வத்­தி­னரும் வழி­காட்­டல்­களை மீறிய அல்­லது அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் வழி­காட்­டல்­களின் பல­வீனம் கார­ண­மாக பல்­வேறு பாதக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு உடல், உள பாதிப்­புக்­குள்­ளா­கு­வ­துடன், உயிர் இழப்­புக்­க­ளையும் சந்­தித்து வரு­கின்­றனர். இளம் தலை­மு­றை­யினர் தற்­கொலை செய்து கொள்­கின்ற சம்­ப­வங்­களும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்­நி­லை­மைகள், புதிய தலை­மு­றை­யினர் சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வாழ்­வ­தற்கு வழி­காட்­டப்­ப­ட­வில்லை என்­பதை புடம்­போ­டு­வ­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய சம்­ப­வங்கள் அவர்­களை மாத்­தி­ர­மின்றி ஏனை­ய­வர்­க­ளையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கு­வ­துடன், துய­ரத்­திற்­குள்ளும் தள்­ளி­வி­டு­கின்­றன.

இதே­போன்று, தொடச்­சி­யாக இடம்­பெ­று­கின்ற சில துன்­பியல் சம்­ப­வங்கள் மனி­தா­பி­மானம் கொண்­ட­வர்­களின் உள்­ளங்­களை வேத­னையில் நனைத்­தது. அதுதான் சுற்­றுலாச் செல்லும் மாண­வர்­களும், வளர்ந்­த­வர்­களும், கடல், ஆறு, குளம், நீர் வீழ்ச்சி என்­ப­வற்றில் குளிக்கச் சென்று உயி­ரி­ழக்கும் பரி­தா­ப­கர­மான சம்­ப­வங்­க­ளாகும். இவ்­வா­றான பரி­தா­ப­க­ர­மான சம்­ப­வங்­க­ளினால் அண்­மைக்­கா­ல­மாக உயிர் இழப்­புக்கள் அதிகம் ஏற்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

உரிய வழி­காட்டல் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டு­கின்ற போதிலும் அவற்றை கருத்­திற்­கொள்­ளாது செயற்­ப­டு­வ­தனால் இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கி­றதா அல்­லது வழங்­கப்­ப­டு­கின்ற வழி­காட்டல் ஆலோ­ச­னைகள் பல­வீ­ன­ம­டைந்­துள்­ளதா என்ற கேள்­வி­களும் பல்­வேறு தரப்­புக்­க­ளி­லி­மி­ருந்து எழுப்­பப்­ப­டு­வ­தையும் காண முடி­கி­றது. இது தவிர, மது, புகைத்தல் மற்றும் போதை­வஸ்துப் பாவ­னைக்கு அடி­மைப்­ப­டு­வது, வன்­மு­றைகள், துஷ்­பி­ர­யோகச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­வது அவற்­றிற்கு உள்­ளா­கு­வது போன்­ற­வற்­றி­னாலும் புதிய தலை­மு­றை­யினர் எதிர்­கால வள­முள்ள வாழ்­நாட்­களைக் காவு­கொள்ளச் செய்­கின்­றனர். இவ்­வாறு பதி­வாகும் துன்­பியல் சம்­ப­வங்கள் வீட்­டிலும், பாட­சா­லை­யிலும், மத வழி­பாட்­டுத்­த­ளங்­க­ளிலும் வழங்­கப்­ப­டு­கின்ற வழி­காட்­டல்­களைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கின்­றன. விழு­மி­யங்­களை பல­வீ­ன­ம­டையச் செய்­தி­ருக்­கின்­றன.

சமு­தா­யத்­தினால் அங்­கீ­க­ரிக்க முடி­யாத நிகழ்­வுகள் அவற்றில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் அல்­லது அவற்­றினால் பாதிப்­புக்குள்­ளா­கின்­ற­வர்­களின் நடத்­தை­கள், மன­வெ­ழுச்சி குறித்­தான உள­நலப் பரீட்­சித்தல் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஒரு­வரின் உடல் தகைமை எவ்­வாறு உள்­ளது என்­ப­­தற்­காக மருத்­துவப் பரி­சோ­தனை இடம்­பெ­று­கின்­ற­போ­திலும், உள­ந­லத்­துக்­கான பரீட்­சித்தல் பொது­வாக இந்­நாட்டில் இடம்­பெ­று­வ­தில்லை என்ற நிலையில் உள­ந­லத்­துக்­கான ஆலோ­ச­னை­களும், வழி­காட்­டலும் அவ­சி­ய­மா­க­வுள்­ள­துடன் விழு­மியக் கல்­வியின் அவ­சி­யமும் உண­ரப்­ப­டு­வது முக்­கி­ய­மா­க­வுள்­ளது. ஏனெனில், மேைல­த்­தே­ய­வர்­களின் விழு­மி­ய­மற்ற நடத்­தை­களை நாக­ரீ­க­மென்­றண்ணி­யி­ருக்கும் புதிய தலை­மு­றை­யினர் அவற்றைப் பின்­பற்ற முயல்­வ­தா­னது பல ஆபத்­துக்­களை எதிர்­நோக்கச் செய்­கி­றது

புதிய தலை­மு­றை­யி­னரின் நாக­ரீக நடத்­தைகள் அநா­க­ரீ­கத்தை நோக்கி நகர்ந்து செல்­வ­தனால் பல்­வேறு விளை­வு­க­ளுக்கு அவர்கள் முகம்­கொ­டுத்துக் கொண்­டி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது. குறிப்­பாக ஆண், – பெண் நட்பு என்­பது பாலியல் உறவை அடைந்­து­கொள்­வது என்ற அர்­தத்­திற்­குள்­ளாகி அதற்­கான தவ­றான வழி­களைத் தேடிக்­கொண்டு அலையும் இளைய சமூ­கத்தின் எண்­ணிக்­கையை அறைகள் வாட­கைக்கு என்ற விளம்­ப­ரத்­துடன் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள வியா­பா­ரத்தை கணிப்­பிட்டுக் கண்டு கொள்ள முடி­வ­துடன், ஒவ்­வொரு வரு­டத்­திலும் வெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்ற காதலர் தினத்தில் வாட­கைக்­காகப் பதிவு செய்­யப்­ப­டு­கின்ற அறை­களின் எண்­ணிக்­கையைக் கொண்டும் மதிப்­பிட்­டுக்­கொள்ள முடி­கி­றது.

இவ்­வா­றான தகாத உற­வு­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற நோய்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கையில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யினர் இள­வ­ய­தி­ன­ராக உள்­ள­தா­கவும் கடந்த கால சுகா­தாரத் தக­வல்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன. இலங்­கையில் 10 வய­திற்கும் 19 வய­துக்­கு­மி­டைப்­பட்­ட­வர்கள் பாலியல் நோய்­க­ளுக்கு ஆளாகி வரு­கின்­றனர் என்ற அதிர்ச்சித் தக­வல்­களும் கடந்த காலங்­களில் வெளியாகி ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­தோடு எதிர்­கால சந்­த­தி­யி­னரின் இந்த ஆபத்­தான நிலை குறித்து சக­லரும் சிந்­திப்­ப­தையும் அவ­சிய­மாக்­கி­யி­ருக்­கி­றது.

பாலியல் சம்­பந்­த­மான நோய்­க­ளுக்­காக சிகிச்சை பெற வரு­வோரில் பாட­சாலை மாணவ, மாண­வி­களும் இருப்­ப­தாக மருத்­துவ அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருந்­தனர். இவை தொடர்பில் பெற்­றோர்­க­ளும், ஆசி­ரியர் சமூ­கத்­தி­னரும் கூடு­த­லாக கவனம் செலுத்த

வேண்­டு­மென வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கி­யு­முள்­ள­துடன், எதிர்­கா­லத்தில் பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்து இருப்­ப­தாக எச்­ச­ரித்­தி­ருந்­த­தையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

பாலியல் நோய்த்­தொற்­றா­னது அதி­க­ளவில் தகாத பாலியல் நடத்­தை­களின் கார­ண­மா­கவே ஏற்­ப­டு­கி­றது. விழு­மி­யங்கள் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்டு இடம்­பெ­று­கின்ற விப­சா­ரமும், ஒருபால் உறவும் உலகில் மலிந்து விட்­டது. மதங்­க­ளையும், கலா­சா­ரத்­தையும் மதிக்­கின்ற நமது நாட்­டிலும் விப­சாரம் அதி­க­ரித்­து­விட்­டது. மசாஜ் சிகிச்சை நிலை­யங்கள் என்ற போர்­வையில் நடத்­தப்­ப­டு­கின்ற பல விப­சார நிலை­யங்கள் பொலி­ஸா­ரினால் முற்­று­கை­யி­டப்­பட்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அவ்­வப்­போது கைது செய்­யப்­படும் சம்­ப­வங்­களும் இடம்­பெ­று­கின்­றன.

சமூக வலைத் தளங்கள் என்றும் கைய­டக்கத் தொலை­பேசி என்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்­ப­டுத்­தி­யுள்ள வச­தி­களின் கார­ண­மாக தகாத உற­வுகள் ஏற்­பட்டு அதனால் கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டிய ஒழுக்க விழு­மி­யங்கள் சிதைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தகாத பாலியல் உற­வு­க­ளினால் பாலியல் நோய்கள் மாத்­தி­ர­மல்ல உயிர்ப் பலி­களும் ஏற்­ப­டு­கின்­றமை புதிய தலை­மு­றை­யி­னரின் வாழ்க்கைப் பாதை­யையும், எதிர்­கா­லத்­தையும் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சமூக ஆர்­வ­லர்கள் கவலை வெளியி­டு­கின்­றனர்.

இலங்­கையில் 96 வீத­மானோர் பாலியல் காட்­சி­களைப் பார்ப்­ப­தற்கும், பிறரின் குற்­றங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­குமே இணை­யங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தாக ஆய்­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இதி­லி­ருந்து நாக­ரீ­கத்தின் வெளிப்­பா­டுகள் அநா­க­ரீ­கத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருப்­ப­தையும் தகாத பாலியல் உற­வுகள், அவ­சி­ய­மற்ற கருக்­க­லைப்­புக்­க­ளையும், சிசுக்­கொ­லை­க­ளையும் இலங்­கையில் அதி­க­ரிக்கச் செய்­துள்­ள­மை­யையும் காண முடி­கி­றது.

கடந்த கால தர­வு­களின் பிர­காரம் வரு­ட­மொன்­றுக்கு ஏறக்­கு­றைய 360,000 பெண்கள் கரு­வு­று­கின்­ற­போ­தி­லும், இதில் 15,000 கருக்கள் சட்­ட­வி­ரோ­த­மாகக் கருக்­க­லைப்புச் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் இச்­சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்­பினால் கரு­வு­று­கின்ற பெண்­களில் 10 உயிரி­ழப்­ப­தா­கவும் கரு­வு­று­கின்­ற­வர்­களில் 24,000 பேர் இள­வ­தி­யினர் எனவும், இள­வ­ய­தி­னரின் கரு­வு­று­த­லுக்கு போதிய கல்வி அறி­வின்மை, வறுமை, தகாத உற­வுகள் மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பவை கார­ண­மாக இருப்­ப­தா­கவும் நா­ளொன்­றுக்கு சரா­சரி 650 சட்ட விரோதக் கருக்­க­லைப்­புக்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன.

திரு­ம­ண­மா­காத பல யுவ­திகள் தகாத உறவின் மூலம் கரு­வுற்று கருக்­க­லைப்புச் செய்­வ­தையும், கரு­வினைக் கலைக்க முடி­யா­த­வர்கள் பிள்­ளை­களைப் பெற்று அச்­சி­சுக்­களை வீதி­யோ­ரங்­க­ளிலும் காடு, பற்­றை­க­ளிலும் எறிந்து விட்டுச் செல்­வ­தையும் அதற்­காக அத்­த­கை­ய­வர்கள் கைது செய்­யப்­ப­டு­வதும் இலங்­கையில் இடம்­பெ­று­கின்ற குற்றச் செயல்­களின் பட்­டி­யலில் ஒன்­றாகக் காணப்­ப­டு­கி­றது. நாக­ரீகம் என்ற போர்­வையில் விழு­மி­யங்கள் மாசு­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­மையே இந்­நி­லை­மை­க­ளுக்குக் கார­ண­மா­கி­றது என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

அநா­க­ரீகப் போதைக்குள் விழுந்து தத்­த­ளிக்கும் இளம் சமுதா­யத்­தி­ன­ருக்கு ஒழுக்க விழு­மி­யங்­க­ ேளாடு வாழ்­வ­தற்­கான வழி­காட்­டல்கள் வழங்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். சமூக, பொரு­ளா­தார, குடும்ப சீர­ழிவை ஏற்­ப­டுத்தும் ஒழுக்­க­வி­ழு­மி­ய­மற்ற நடத்தைப் பிறழ்­வு­க­ளி­லி­ருந்து எதிர்­கால சமூ­கத்தைப் பாது­காக்­கவும் ஒழுக்­க­வி­ழு­மி­ய­மிக்க எதிர்­கால சமூ­கத்தை உரு­வாக்­கவும் விழு­மியமிக்க கல்­வித்­திட்­டமும், விர­ச­மற்ற பாலியல் கல்­வியும் முறை­யாக பாட­சா­லை­களில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய தேவை குறித்து சம­கா­லத்தில் பேசப்­பட்டு வரு­கின்­றன.

இலங்­கையில் மாணவப் பரு­வத்­தி­லுள்­ள­வர்­களும் பாலியல் நோய்த் தொற்­று­கைக்கு உள்­ளாகி வரு­கின்­றனர். இது தொடர்பில் மாண­வர்கள் அறி­வூட்­டப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. இதற்கு பாட­சா­லை­களில் பாலியல் கல்வி கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்ற கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்டு வந்­தா­லும், மாண­வர்­களை அறி­வூட்­டு­வ­தற்­காக பாட­சா­லை­களில் பாலியல் கல்வி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது இக்­கல்வி நட­வ­டிக்­கை­களும் அதன் பாடப்­ப­ரப்­புக்­களும் பாலியல் நட­வ­டிக்­கை­களை ஊக்­கு­விப்­ப­தாக அமைந்து விடாத வகையில் இப்­பா­டத்­துக்­கான பாட­வி­தான அல­குகள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

சமூக ஒழுங்குப் பிறழ்­வுகள், பயில் நிலை வழி­யாகச் சீர்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மாயின் பாட­சாலைக் கலைத்­திட்­டத்தில் அனு­ப­வங்கள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். பாட­சாலைக் கலைத்­திட்ட அமைப்­பி­ய­லையும் அதன் சம­காலச் செயல் நிலை­க­ளையும் ஆராய்ந்து பார்க்­கும்­பொ­ழுது மாண­வர்­க­ளி­டை­யேயும் ஒரு சில ஆசி­ரி­யர்­க­ளி­டை­யேயும் ஆரோக்­கிய மன­வெ­ழுச்­சிக்­கு­ரிய பயிற்­சிகள் போதாமல் இருப்­பது தெளிவா­கி­றது. இதனைப் புடம்­போடும் வகையில், பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

ஆரோக்­கி­ய­மான மன­வெ­ழுச்­சிக்குரிய பயிற்­சி­களும் விழு­மியக் கல்­வியும் ஒன்­றி­ணைந்­த­வை­யாகக் காணப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். தற்­கால பாட­சாலை மாணவ சமூ­கத்­தி­னதும் சில ஆசி­ரி­யர்­க­ளி­னதும் மன­வெ­ழுச்­சிகள், மனப்­பாங்­குகள், நடத்­தைக்­கோ­லங்­களை உற்­று­நோக்­கு­கின்­ற­போது அவை ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமை­ய­வில்லை. அவ்­வா­றுதான் சில பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் விரி­வு­ரை­யா­ளர்­களின் நடத்தைக் கோலங்­களும் காணப்­ப­டு­கின்­றன

ஒழுக்க விழு­மி­ய­முள்ள எதிர்­கால சமு­தா­யத்தை உரு­வாக்கும் கேந்­திரத் தள­மாக பாட­சா­லைகள் மிளிர்­கின்­றன. அவ்­வா­றுதான் கல்விப் புல­மை­கொண்ட புதிய தலை­மு­றை­யி­னரை பல்­க­லைக்­க­ழ­கங்கள் உரு­வாக்­கு­கின்­றன. பாட­சா­லை­க­ளி­லி­ருந்து ஒழுக்­க­வி­ழு­மி­ய­முள்ள எதிர்­கால சமூகம் உரு­வாக்­கப்­ப­டு­வது இன்­றி­ய­மை­யா­தது. நடத்தைப் பிறழ்­வு­களால், விழு­மி­ய­மற்ற செயற்­பா­டு­களால் ஏற்­ப­டு­கின்ற நோய்கள் முதல் ஏனைய சமூகம் அங்­கீ­க­ரிக்­காத சமூக விரோத நட­வ­டிக்­கைகள் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து ஒழிக்­கப்­பட வேண்­டு­மாயின், அதன் ஆபத்­துக்கள் அதி­க­ரிக்­கப்­ப­டாமல் தடுக்­கப்­பட வேண்­டு­மாயின் அவை தொடர்­பான வழி­காட்டல் ஆலோ­சனை, விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் முறை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன் ஒழுக்க விழு­மி­யங்­களைப் பேணி நடக்கக் கூடிய ஆரோக்­கி­ய­முள்ள எதிர்­காலச் சமூகம் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வதும் காலத்தின் கட்­டா­ய­மாகும்.

விழு­மி­யங்­களும், வழி­காட்­டல்­களும் பல­வீ­ன­ம­டை­கின்­ற­போது பிள்­ளைகள் வழி­த­வ­று­வ­தையும், திசை­மாறிப் பய­ணிப்­ப­தையும், பரி­தாப உயிர் இழப்­புக்­களைச் சந்­திப்­ப­தையும் தவிர்க்க முடி­யாது. ஆதலால், ஒரு பிள்­ளையின் சமூக மய­மாக்கல் முக­வர்­களும் இவற்­றோடு ஊட­கங்­களும் புதிய தலை­மு­றை­யி­ன­ருக்கு சிறந்த வழி­காட்டல் ஆலோ­ச­ன­களை வழங்­கு­வதில் அக்­கறை செலுத்த வேண்­டு­மென்­ப­துடன் பாட­சாலை, பல்­க­லைக்­க­ழங்­களில் விழு­மியக் கல்­வியும், வழி­காட்டல் ஆலோ­சனை நட­வ­டிக்­கை­களும் சக்­தி­மிக்­க­தாக்­கப்­பட வேண்டும்.

புதிய தலை­மை­யி­னரில் ஒரு சாரார் தமது எதிர்­கால நல்­வாழ்­வுக்­கான வழி­களைத் தேடி அப்­பாதை வழிேய தங்­க­ளது எதிர்­காலப் பய­ணத்தை ஆரோக்­கி­ய­மாக நகர்த்திச் செல்லும் தரு­ணத்தில் இத்­த­லை­மு­றையின் மற்­று­மொரு சாரார் கொலை, கொள்ளை, வன்­முறை, சிறுவர், பெண்கள் மீதான துஷ்­பி­ர­யோகம், தற்­கொலை, போதைப் பொருள் பாவனை, விற்­பனை என்ற சமூக விரோதச் செயற்­பா­டு­களில் தங்­க­ளது ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்தின் திசையை மாற்றிப் பய­ணிக்­கின்­றனர். அதனால் அவர்­க­ளா­கவே அவர்­களின் எதிர்­கா­லத்தைச் சூனி­ய­மாக மாற்றிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இத்­த­கை­ய­வர்கள் சமூக விழு­மி­யங்­க­ளையும், ஒழுக்க நெறி­க­ளையும் பின்­பற்றி கட்­டுக்­கோப்­புக்குள் வாழ வழி­காட்­டப்­ப­டு­வது காலத்தின் நிதர்­ச­ன­மாகும். பாதை மாறிப் பய­ணிக்கும் இப்­பு­திய தலை­மு­றை­யி­னர்­க­ளான இத்­த­கை­ய­வர்­களின் நெறி பிறழ்வான பாதையை மாற்றியமைப்பதில் சமூக முகவர்களதும், ஊடகங்களதும் வகிபங்கு அளப்பெரியதாகும். சமூக முகவர்களின் அர்ப்பணிப்பானது பல்கலைக்கழங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை முதல் ஏனைய விழுமியம் தவறிய நடவடிக்கைகளைத் தடுக்க பேருதவியாக அமையும். அத்துடன் நெறி பிறழும் புதிய தலைமுறையினரின் எதிர்காலத்தை ஒளிமய மாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.