;
Athirady Tamil News

பிரான்ஸ் “யாமிலன், யாமினி, ஆதித்யா” ஆகியோரின், பிறந்தநாள் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் &வீடியோ)

0

பிரான்சைச் சேர்ந்த திரு திருமதி பாலநேசன் துவாரகா தம்பதிகளின் யாமிலன் யாமினி ஆதித்யா ஆகியோரின் பிறந்த நாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவிகளும்…
###################################
இரட்டையர்களான யாமிலன் யாமினியோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஆனந்தமாக பிறந்த நாளைக் கொண்டாடினார் ஆதித்தியா.

யாழ்.அச்சுவேலியை சேர்ந்தவர்களும், பிரான்ஸ் பாரிசில் வசிப்பவர்களுமான பாலநேசன் துவாரகா தம்பதிகளின் யாமிலன், யாமினி ஆகியோரின் இரணைப் பிள்ளைகளின் 11 வது பிறந்தநாள், மற்றும் இளைய புதல்வன் ஆதித்தியாவின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும், பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கொண்டாடிய பிறந்தநாள் கொண்டாட்டமும், வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியான உலருணவுப் பொதிகளும் திரு.திருமதி.பாலநேசன் துவாரகா தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் நடைபெற்று வருகிறது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சேவையை சமூக வலைத்தளங்களில் கேள்வியுற்று, தாமாகவே முன்வந்து “நலிவுற்றவர்களுக்கு உதவி செய்வது தார்மீகக் கடமையெனக் கூறி” இவ்வுதவியை திரு.திருமதி.பாலநேசன் துவாரகா தம்பதிகள் தமது நிதி பங்களிப்பில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள். மூவரின் பிறந்தநாளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன்றைய நாளில் வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் மூன்றில் ஒழுங்குபடுத்தி செயல்படுத்தியது.

சிறுவர் சிறுமியர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு கைதட்டி ஆரவாரப்படுத்தி மனமகிழ்ச்சியை தெரிவித்தனர்.

பிறந்த நாள் பாட்டுப்பாடி கேக் வெட்டியதுடன் கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது. திரு.திருமதி. பாலநேசன் துவாரகா தம்பதிகளின் செல்வப் புதல்வர்களான ஆதித்யா, யாமிலன், யாமினி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது..

இன்றைய நாளில் சிதம்பரபுரம். கற்குளம், பறநட்டங்கல், பனிக்கர் புளியங்குளம் என மிகவும் கஸ்ரப் பிரதேசங்களில் வாழும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வுலருணவுப் பொதிகள் வழங்கும் நடவடிக்கைகள் இக்குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் “ஆதித்யா, யாமிலன் யாமினி” ஆகியோரின் பிறந்த நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

மேற்படி வாழ்வதார உதவிகளுக்கான நிதிப் பங்களிப்பை வழங்கிய இவர்களுக்கு பயனாளிகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” நன்றிகளைத் தெரிவிப்பதுடன், இன்றைய நாளில் இனிய பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.திருமதி. பாலநேசன் துவாரகா தம்பதிகளின் செல்வப் புதல்வர்களான “ஆதித்யா, யாமிலன், யாமினி” ஆகியோரை “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீறும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

30.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.