;
Athirady Tamil News

கவிதை நூல் வெளியீட்டு விழா!!

0

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த வே.முத்தையாவின் 100வது அகவை நிறைவு தினத்தை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லியின் “விலையுயர்ந்த விதைகள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பேராசிரியர் முனைவர் சி.சிவலிங்காராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வெளியீட்டு உரையினை, கவிஞர்.ரஜிதா அரிச்சந்திரனும்,மதிப்பீட்டுரையினை கவிஞர்.வைவரவநாதன் வசீகரனும்,ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் சதா.கனகலிங்கம் வாழ்த்துரையினை நிகழ்த்தவுள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில் கெளரவ விருந்தினராக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும், சட்டத்தரணி சுதா கஜேந்திரகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.