;
Athirady Tamil News

வவுனியாவில் மதுபோதையில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து அட்டகாசம்: ஆசிரியர் ஒருவர் காயம்!!

0

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (17.11) இரவு 9 மணிக்கு பின்னர் சுமார் ஒரு மணிநேராமாக குறித்த இளைஞர்குழு அவ் வீதியால் பயணிப்பவர்களை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டதுடன், வீதியின் குறுக்கே தமது மோட்டர் சைக்கிள்களை நிறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர். அத்துடன் அவர்களது தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அருகில் உள்ள வீடுகளில் வசித்தோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர் குழுவினர் அப்பாதையூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த நிலையில் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா வைரவர் கோவில் வீதி, கதிரேசு வீதி, மன்னார் வீதி ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக இளைஞர் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்து செல்வதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.