;
Athirady Tamil News

14 மாணவ பிக்குகளுக்கு கொரோனா!!

0

ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் மேலும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவ பிக்குகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரிவெனாவில் இம்மாதம் முதலாம் திகதி 18 மாணவ பிக்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன், கடந்த 10 ஆம் திகதி மீண்டும் 13 மாணவ பிக்குகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான மாணவ பிக்குகளுக்கு தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டு மூன்றாவது தடவையாக இன்று (17) அங்கு கல்வி பயிலும் மாணவ பிக்குகளுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 மாணவ பிக்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

சுமார் 65 மாணவ பிக்குகள் தங்கியிருந்து கல்வி பயிலும் வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில், 10 சிறுவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.