;
Athirady Tamil News

தங்கத்தின் விலை அதிகரிப்பு…!

0

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் கேள்வி அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,862.97 அமெரிக்க டொலர்களில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இலங்கை சந்தையில் 22 கெரட் தங்க பவுணின் விலை 109,200 ரூபாவாகவும், 24 கெரட் தங்க பவுணின் விலை 118,000 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.