;
Athirady Tamil News

மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலி!!

0

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (27) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,305 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 561,778 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 529,240 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.