;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் ரூ.9,802 கோடியில் சரயு கால்வாய் தேசிய திட்டம் – பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார்…!!!

0

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ரூ.9,802 கோடி மதிப்பில் சரயு கால்வாய் தேசிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9 மாவட்டங்களில் 25 முதல் 30 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். 14.04 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும். மேலும் இத்திட்டத்தால் வெள்ள பாதிப்புகளும் குறையும்.

சரயு கால்வாய் தேசிய திட்டத்தின் கீழ் காக்ரா, சரயு, ரப்தி, பன்கங்கா, ரோஹின் ஆகிய 5 நதிகள் இணைக்கப்படுகிறது. 600 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த கால்வாய் 318 கிலோ மீட்டர் நீளமுள்ள முதன்மை கால்வாயுடன் இணையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.