;
Athirady Tamil News

சர்வதேச விமான சேவை ரத்து ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு…!!

0

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பின்னர் கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 25-ந் தேதி, உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப விமான சேவை ரத்து நீட்டிக்கப்படுகிறது.

அவ்வகையில், சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து நடவடிக்கை, 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.