;
Athirady Tamil News

இன்ஸ்டாகிராமில் பெண் போல் பழகி இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த வாலிபர்- போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்…!!

0

திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் கலந்துரையாடி வந்தார். அப்போது இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை போலியாக பதிவிட்ட வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியுடன் நட்பாக பேசியுள்ளார்.

இதன் மூலமாக அந்த மாணவியின் புகைப்படங்களை பெற்று அதனை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை மாணவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் இதுபோல் பல படங்களை மார்பிங் செய்து வைத்துள்ளதாகவும், நிர்வாணமாக வீடியோ அழைப்பில் வந்தால் அந்த படங்களை அழிப்பதாகவும், இல்லையென்றால் இணையதளத்தில் மார்பிங் படங்களை வெளியிடுவேன் என்றும் பெண் குரலில் வாலிபர் பேசி மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி இது குறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ரவி மேற்பார்வையில், இன்ஸ் பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப் பட்ட நபரை தேடி வந்தனர்.

சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் தனிப்படையினர் துப்பு துலக்கினர். இதில் கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பாலியல் தொந்தரவு செய்தது கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த நியாஸ் (வயது 23) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். கைதான நியாசிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதில் பல்வேறு இளம்பெண்களின் அரை நிர்வாண, முழுநிர்வாண படங்கள் மற்றும் வீடியோக் களை பதிவு செய்து வைத்தி ருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நியாசிடம் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் கள் வெளியானது.

இன்ஸ்டாகிராமில் போலியாக பெண்களின் படங்களை பதிவிட்டு ஐ.டி.க்களை உருவாக்கிய நியாஸ், கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசி வந்துள்ளார். பெண் குரலில் பேசியதால் அதனை நம்பி அவருடன் மாணவிகள், இளம்பெண்கள் பழகி வந்துள்ளனர்.

அப்போது புகைப்படங்களை அனுப்பு மாறு கூறவே, அதனை நம்பி இளம்பெண்கள், மாணவிகள் பலர் தங்களது புகைப்படங்களை அனுப்பி யுள்ளனர். அதனை ஆபாசமாக மார்பிங் செய்து மாணவிகள், இளம் பெண்களை மிரட்டிய நியாஸ், வீடியோ அழைப்பில் நிர்வாணமாக வரவேண்டும். இல்லையென்றால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதற்கு பயந்து மாணவிகள், இளம்பெண்கள் பலர் நியாஸ் முன்பு வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றியுள்ளனர். அந்த வீடியோவை நியாஸ் பதிவு செய்து கொண்டு தொடர்ந்து அந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதேப்போல் திருப்பூர் மாணவியை மிரட்டவே அவர் போலீசில் புகார் செய்துள்ளார். இதில் நியாஸ் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டார். நியாசிடம் இளம்பெண்கள், மாணவிகள் பலர் ஏமாந்திருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் நியாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.