;
Athirady Tamil News

ஆசையை காட்டி தொழிலாளர்களை மோசம் செய்ய முயற்சிக்கின்றனர்!!

0

கூட்டுஒப்பந்தம் விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையினை காட்டி மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைசச்ர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் தியஸ்ரீகம பகுதியில் அம்பகமுவ உப பிரதேச செயலாளர் காரியாலயத்தினை திறந்து வைத்து ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேல்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பது கூட்டுஒப்பந்தம் மாத்திரமே, ஆனால் சிலர் கூட்டு ஒப்பந்தம் தேவையில்லையென கூறுகிறார்கள்.

எமக்கு ஒரே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே வேறு எவரும் கிடையாது. எதிர்கட்சியினர் இது போன்ற பொய்யான வந்திகளை பரப்பி வருகின்றனர். எனவே தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பார்.

தற்பொழுது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலை காரனமாக இம்முறை இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தை பொங்கள் விழா போன்ற நிகழ்வுகளை நடத்தாது நாம் கூறுவது எல்லாம், மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.