;
Athirady Tamil News

வவுனியா தோணிக்கல் பாடசாலை கட்டிடத்திற்குள் நடப்பது என்ன?? (படங்கள்)

0

வவுனியா தோணிக்கல் பாடசாலை கட்டிடத்திற்குள் நடப்பது என்ன?? (படங்கள்)

வவுனியா தோணிக்கல் கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் உள்ள கிராம சிறுவர் பாடசாலை கட்டிடத்திற்குள் பகல் இரண்டு மணியளவில் திடீரென வீட்டு தளபாடங்களுடன் வந்த ஒரு வயோதிப பெண் கட்டிடத்திற்க்குள் குடியமர்ந்துள்ளார்.

இதுகுறித்து “அதிரடி”யின் நிருபர் கருத்து தெரிவிக்கையில் “இதுவோர், “செண்டிமெண்டான” விடயம், ஆயினும் இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கவலைக்கிடம்” என்கிறார்.

சம்பந்தப்பட்ட பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஓய்வவூதியம் பெறுபவர் என்று கூறப்படுகிறது, இருப்பினும் இவ்வளவு நேரமாகியும் பல அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

உரிய அரச அதிகாரிகளே கவனம் செலுத்துங்கள்.. (தெரிவிப்பது நாம், தீர்மானிப்பது நீங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.