;
Athirady Tamil News

வைத்திய பீட மாணவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் கைது!!

0

ராகமையில் அமைந்துள்ள வைத்திய பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம மருத்துவ பீடத்தின் விடுதி மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வௌியில் இருந்து வந்த குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.