;
Athirady Tamil News

இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் !!

0

கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இன்று (07) நடைபெறவுள்ளது.

கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதும் எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதும் இதன் நோக்கமாகும்.

அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அனைத்துக் கட்சி செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றம் நாளை (08) முதல் நான்கு நாட்களுக்கு கூட்டுவதற்கு முன்னதாக தீர்மானித்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை, சுமார் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.