;
Athirady Tamil News

2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

0

வத்தளையில் 2 கிலோ 579 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபரும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபருக்கு போதைப்பொருளை வழங்கியவர் யார், சந்தேக நபர் போதைப்பொருளை யாருக்கு விற்பனை செய்கின்றார் என்பது தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.