;
Athirady Tamil News

பெண் ஒருவர் சுட்டுக்கொலை!!

0

மத்துகம பாலிகா வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணின் கணவனை கொலை செய்வதற்காக குறித்த சந்தேக நபர்கள் வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அப்போது அவர் வீட்டில் இருந்தபோதும் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ​

சம்பவ இடத்தில் 06 ரி56 துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்துகம நீதவான் முதற்கட்ட நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை பிடிக்க மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.