;
Athirady Tamil News

மற்றுமோர் இராஜாங்க அமைச்சர் இராஜினாமா? !!

0

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது தனிப்பட்ட ஊழியர்களை அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சின் செயலாளருடனான பிரச்சினை காரணமாக தனியார் ஊழியர்களை நீக்குவதற்கு இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நாளை (16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (15) ஜனாதிபதியை சந்திக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நிமல் லான்சாவுக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.