;
Athirady Tamil News

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இளைஞன் கைது!!

0

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் ஒருவரை இன்று (16) மாலை கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று மாலை ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானை காட்டுபகுதியை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இளைஞன் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.