;
Athirady Tamil News

அமைச்சர் டளஸ் கலந்து கொண்ட கூட்டத்தில் கருப்பு பட்டி அணிந்து ஊடகவியலாளர்கள் அடையாள எதிர்ப்பு!! (படங்கள்)

0

யாழ் மாவட்டத்தில் வெகுசன ஊடக துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்ட கூட்டத்தில் கருப்பு பட்டி அணிந்து ஊடகவியலாளர்கள் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் வெகுசன ஊடக துறை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பு ஒன்றும் இன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கருப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.