;
Athirady Tamil News

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 130 பேர் பலி- பிரேசில் அரசு நிவாரணம் அறிவிப்பு…!!!

0

பிரேசில் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் பல உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 100-க்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பேரழிவு பாதித்த பகுதிகளை வான்வழி மூலம் ஆய்வு செய்தார். பின் அவர் கூறுகையில், இது ஒரு ” போர் காட்சி” போல் இருக்கிறது. தொடர் நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால நிவாரணமாக பிரேசில் அரசு சுமார் 700 கோடி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.