;
Athirady Tamil News

கசூரினா கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

0

மதுபோதையில் கடலில் குளித்த முதியவர் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளாரென ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டியவைச் சேர்ந்த அன்ரன் ஜேக்கப் ( வயது – 57 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தொழில் நிமித்தம் குளியாப்பிட்டி பகுதியிலிருந்து மண்டைதீவு பகுதிக்கு வந்து, தங்கி நின்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருடன் முதியவர், காரைநகர் கசூரினா கடற்கரையில் குளித்துள்ளார். அவர் அலையில் சிக்கி கொண்டாரெனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் ஏனையோரால் காப்பாற்றப்பட்டு பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்து விட்டாரென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.