;
Athirady Tamil News

பெரியபாளையம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்…!!!!

0

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி புதியதமிழ் காலனியை சேர்ந்தவர் வேணு (வயது60) கூலித்தொழிலாளி.இவருக்கு திருமணமான 3 மகள்கள் மற்றும் மணிகண்டன் (வயது20) என்ற மகன் உள்ளனர்.மனைவி இறந்ததால் மகன் மணிகண்டனுடன் வேணு வசித்து வந்தார்.

மணிகண்டன் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையானவர். ஆரணியில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் காலையிலிருந்து மணிகண்டன் மது குடித்த வண்ணம் இருந்தார். மாலையில் மணிகண்டன் தனது தந்தை வேணுவிடம் கஞ்சா வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

வேணு தனது மகனை கஞ்சா அடிக்க கூடாது என்று அறிவுரை கூறி பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து வேணுவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே வேணு பலியானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கஞ்சா வாங்க பணம் கேட்டு தனது தந்தையை தானே அடித்துக் கொன்று விட்டேனே என்று அழுத வாரே அருகிலிருந்த சுவற்றில் தன் தலையை மோதினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மணிகண்டனை பிடித்து ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். பலியான கூலித்தொழிலாளி வேணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் மணிகண்டன் எங்கிருந்து கஞ்சா வாங்கி வருகிறார்? யார் யாருடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.