;
Athirady Tamil News

நாடு முழுவதும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர்…!!

0

உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், உக்ரைன் தங்களது இலக்கு இல்லை எனவும் புதின் அறிவித்திருந்தார். ஆனால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில ரஷியா ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்பாதுப்பை மேற்கொண்டு வரும் உக்ரைன், ரஷியாவின் ஐந்து விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

ரஷியா தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிர் ஜெலென்ஸ்கி கூறுகையில் ‘‘கீப் பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்து மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள ராணுவ தளங்களில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. நாங்கள் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

இதற்கிடையில் உக்ரைன் ராணுவ தளங்கள் மற்றும் பாதுகாப்பை அழித்துள்ளதாக ரஷஜயா தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.