;
Athirady Tamil News

இளவாலை பொலிஸ் பிரிவில் திருட்டில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவர் கைது!!

0

இளவாலை பொலிஸ் பிரிவில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை திருட்டில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்து பணம் வழங்கி உதவினர் என்ற குற்றச்சாட்டில் தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை வறுத்தவிளான் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் 53 வயதுடைய தந்தையும் 36 வயதுடைய மகளும் கைது செய்யப்பட்டனர்.

இளவாலை பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக பட்டப்பகலில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் வேளையில் வீடுடைத்து திருட்டுச் சம்பவங்கள் ஏழுக்கு மேற்பட்டன இடம்பெற்றன.

அவை தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

உதவிப் பொலிஸ் பரிசோதகர்களான நிதர்சன், கலாவினோதன் ஆகியோரின் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 3 தங்கப்பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.