;
Athirady Tamil News

யாழில். வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயம்!!

0

யாழ். நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாவற்குழி ப.நோ.கூ சங்க மண்டபத்திற்கு முன்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைதடியை சேர்ந்த ரத்தினகுமார் சுவின்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

அதேவேளை கெற்பேலி மத்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மிருசுவிலை சேர்ந்த இராசதுரை கோணேஸ்வரன் (வயது36) என்பவர் தலையில் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.