;
Athirady Tamil News

சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கள்ள கணவர்!!

0

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் தாயின் கள்ள கணவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

சிறுமியின் தாயும் அதே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

சிறுமியின் தந்தை இறந்ததையடுத்து சந்தேக நபருடன் தாய் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சந்தேகநபர் தன்னை அவ்வப்போது கற்பழித்து வந்ததாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.