;
Athirady Tamil News

நாட்டில் மேலும் 508 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

0

நாட்டில் மேலும் 508 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 650140 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,331 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 8,319 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,141 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.