;
Athirady Tamil News

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.!! (படங்கள் & வீடியோ)

0

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சியும் இடம்பெற்றது.

அத்தோடு இன்றைய மகளிர் தின நிகழ்வில் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சில சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான கௌரவமும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.