;
Athirady Tamil News

இரு இடங்களில் கொலை, நகை கொள்ளை !!

0

நாட்டின் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று காலை வந்த இருவர் வீட்டினுள் பெண்ணை கட்டி வைத்து கணவனை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மாலபே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலியானவர் 80 வயதுடையவர். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று (16) காலை சீதுவ, முகலங்காமுவ பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் திருடப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைதுசெய்ய சீதுவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.