;
Athirady Tamil News

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘டுவிட்டர்‘ !!

0

உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon musk) பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கினார்.

இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் வரை உயர்வடையவே அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலன் மஸ்க் மாறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் எலன் மஸ்க்கும் இணையவுள்ளதாக அந்நிறுவன தலைமை செயற்பாட்டு அதிகாரி பராக் அகர்வால் அறிவித்துள்ளார்.

மேலும் ” தங்கள் குழுவில் எலான் மஸ்க் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், தங்கள் நிறுவனத்திற்கு அவர் பெரும் மதிப்பைக் கொண்டு வருவார் ” எனவும் பராக் அகர்வால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.