சௌதி அரேபியா சோஃபா தொழிற்சாலையில் தீ விபத்து: 16 வங்கதேச தொழிலாளா்கள் உயிரிழப்பு
சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வங்கதேச புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
ரியாதில் உள்ள மூசா சனையா தொழிற்பேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
உயிரிழந்தவா்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவருவதற்கான அனைத்து நடைமுறைகளையும் சவூதி அதிகாரிகளுடன் இணைந்து ரியாதில் உள்ள வங்கதேச தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
சௌதி அரேபியாவில் சுமாா் 35 லட்சம் வங்கதேசத்தவா்கள் வசித்து வருகின்றனா். வங்கதேச புலம்பெயா் தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றும் நாடாக சௌதி அரேபியா திகழ்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அங்குள்ள தொழிலாளா்கள் 270 கோடி டாலருக்கும் அதிகமான தொகையை வங்கதேசத்துக்கு அனுப்பியுள்ளனா்.